Begin typing your search above and press return to search.
இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்தவர்கள் மீது லாரி மோதி 2 பேர் உயிரிழப்பு
இருசக்கரவாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தவர்கள் மீது, பின்னால் வந்த லாரி மோதி 2 பேர் உயிரிழப்பு.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் ஜெமீன் ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விக்கி மற்றும் ஆகாஷ். இவர்கள் கீழப்பழுவூரில் இருந்து ஜெமீன் ஆத்தூர் நோக்கி செல்லும் போது, மேலப்பழுவூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏறிய போது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் இவர்கள் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் இரண்டு பேரும் கீழே விழுந்தனர்.
அப்போது பின்னால் டால்மியா சிமெண்ட் ஆலைக்கு சுண்ணாம்புக்கல் ஏற்றி சென்ற டிப்பர் லாரி, இவர்கள் மீது ஏறியதில் இரண்டு பேரும் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் டிப்பர் லாரி ஓட்டுனர் மாரியப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.