நாமக்கல் மாவட்டத்தில் 7 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்

நாமக்கல் மாவட்டத்தில் 7 வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றம் செய்து கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-12-12 10:15 GMT

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவல ராக (பிடிஓ) பணியாற்றி வந்த தனபால், எலச்சிபாளையம் பிடிஓவாகவும் (கிராம ஊராட்சிகள்), அங்கு பணியாற்றி வந்த அருளப்பன், ராசிபுரத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்ள்ளனர்.

இதேபோல் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த துரைசாமி, மாவட்ட சிறுசேமிப்பு அலுவலராகவும், சிறுசேமிப்பு அலுவலராக பணியாற்றி வந்த சங்கர், கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலராகவும், அங்கு பணியாற்றி வந்த ஜெயகுமரன், எலச்சிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், சேந்தமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் புஷ்பராஜன், கொல்லிமலை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சிகள்), கொல்லிம லையில் பணியாற்றி வந்த ரவிச்சந்திரன், சேந்தமங்கலம் பிடிஓ ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News