நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் தமிழ் மன்றம் விழா

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரித் தமிழ்த்துறை சார்பில் தமிழ் மன்ற விழா நடைபெற்றது.

Update: 2022-05-16 08:00 GMT

நாமக்கல் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற தமிழ் மன்றம் விழாவில், உடுமலைப்பேட்டை விசாலாட்சி பெண்கள் கல்லூரி மாணவி உமாநந்தினி பேசினார்.

நாமக்கல் அரசு கலைக்கல்லூரியில் தமிழ் மன்றம் விழா நடைபெற்றது.

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரித் தமிழ்த்துறை சார்பில் தமிழ் மன்ற விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முருகன் தலைமை வகித்தார். தமிழ்த்துறைத்தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார். உடுமலைப்பேட்டை ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி பெண்கள் கல்லூரி, தமிழ்த்துறை முதலாண்டு மாணவி உமாநந்தினி பங்கேற்று திருமுறை காட்டும் நேர்மறைச் சிந்தனைகள் என்ற தலைப்பில் பேசினார். முன்னதாக இளங்கலை மூன்றாமாண்டு மாணவர் தருண் வரவேற்றார். இளங்கலைத் தமிழ் இரண்டாமாண்டு மாணவர் பிரகாஷ், நன்றி கூறினார். இளங்கலைத் தமிழ் மூன்றாமாண்டு மாணவி யமுனா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

Tags:    

Similar News