நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!

நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.

Update: 2024-05-07 11:15 GMT

பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த, நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை, பள்ளி தலைவர் டாக்டர் குழந்தைவேல் பாராட்டினார்.

நாமக்கல்,

நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளி மாணவர் கவிப்பிரியன் 4 பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.


நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு பிளஸ் 2 வகுப்பில், கலைப்பிரிவில் படித்து, பொதுத்தேர்வு எழுதிய தயாநிதி, ஆகாஷ், சுதர்சனா ராஜேந்திரன் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களைப் பெற்றுள்ளனர். அறிவியல் பிரிவில் படித்த மாணவிகள் கவுசிகா, கவினா, நிகிதாஸ்ரீ ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர். பிளஸ் 2 பொதுத் தேர்வில் அக்கவுண்டன்சி பாடத்தில் 10 மாணவர்களும், வணிகவியல் பாடத்தில் 8 மாணவர்களும், பொருளாதாரம் பாடத்தில் ஒருவரும், வணிக கணிதம் பாடத்தில் ஒருவரும், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடத்தில் ஒருவரும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 2 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இப்பள்ளி மாணவர் கவிப்பிரியன் அக்கவுண்டன்சி, காமர்ஸ், எகனாமிக்ஸ், கப்யூட்டர் அப்ளிகேஷன் ஆகிய 4 பாடங்களிலும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி தலைவர் டாக்டர் குழந்தைவேல், செயலாளர் சந்திரசேகரன், முதல்வர் சோமசுந்தரம், துணை முதல்வர் ரமேஷ் ஆகியோர் பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கினார்கள்.

Tags:    

Similar News