நாமக்கல்லில் வரும் 10ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்

நாமக்கலில் வருகிற 10ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

Update: 2022-06-06 10:45 GMT

பைல் படம்.

நாமக்கலில் வருகிற 10ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- தனியார்துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், மாதந்தோறும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. இம்மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 10ம் தேதி நடைபெறுகிறது. எனவே, தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்துகொள்ளலாம்.

முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு மேனேஜர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், மார்க்கெட்டிங் பிரதிநிதிகள், சூப்பர்வைசர், அக்கவுண்டண்ட், கேஷியர், டைப்பிஸ்ட், மெக்கானிக் உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வுசெய்யவுள்ளனர். 10-ம் வகுப்பு தேர்ச்சி/தேர்ச்சி பெறாதவர்கள், பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி பெற்றோர் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும் இலவச திறன் பயிற்சிகளில் சேர பதிவும் ஆலோசனையும் வழங்கப்படும். விருப்பம் உள்ள அனைவரும் வருகின்ற 10ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நாமக்கல் மாவட்டவேலைவாய்ப்பு மையத்தில் நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News