நாமக்கல் உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட 29ம் தேதி வரை விருப்ப மனு

நாமக்கல் கிழக்கு மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை அளிக்க 29ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-24 10:45 GMT

ராஜேஷ்குமார், எம்.பி, கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்.

இது குறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் டவுன் பஞ்சாயத்து தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட விரும்புவேர், தங்களின் விருப்ப மனுக்களை வழங்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை ரூ.10 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்துடன், நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு ரூ.5,000, டவுன் பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு ரூ. 2,500 வீதம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்ப்பட்ட விருப்ப மனுக்களை வரும் 29ம் தேதி மாலை 5 மணிக்குள், நாமக்கல்லில் உள்ள கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வழங்க வேண்டும். ஆதி திராவிடர் மற்றும் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகளில் போட்டியிட விரும்புவோர் கட்டணத்தில் பாதித் தொகையை செலுத்தினால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News