தேசிய அளவிலான வளையப்பந்துப் போட்டி: நாமக்கல் மாணவர் அபிஷேக் வெற்றி
தேசிய அளவிலான வளையப்பந்துப் போட்டியில் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர் அபிஷேக் தங்கப்பதக்கம் வென்றார்.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள பூர்ணிமா பல்கலைக்கழகத்தில் கடந்த மார்ச் 31ம் தேதி முதல், ஏப். 4ம் தேதி வரை, 45வது தேசிய சீனியர் வளையப்பந்து (டெனிகாய்ட்) போட்டி நடைபெற்றது. நாடு முழுவதும் இருந்து 25 மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் இதில் பங்கேற்றனர். தமிக அணி சார்பில் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் பி.விஎஸ்சி இறுதியாண்டு படிக்கும் மாணவர் அபிஷேக் பங்கேற்றார்.
அவர் ஆண்களுக்கான குழுப்போட்டி மற்றும் கலப்பு இரட்டையர் போட்டி ஆகிய இரண்டிலும் பங்கேற்று தங்கப்பதக்கத்தை வென்றார். தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் அபிஷேக்கிற்கு, கல்லூரி முதல்வர் டாக்டர் செல்வராஜ் மற்றும் பேராசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.