நாமக்கல்: ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பித்தோருக்கு நேர்முகத்தேர்வு

நாமக்கல் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பித்தோருக்கு நேர்முகத்தேர்வு வருகிற 21ம் தேதி நடைபெற உள்ளது.

Update: 2022-06-17 09:15 GMT

நாமக்கல் மாவட்டத்தில், ஊர்க்காவல்படைக்கு விண்ணப்பித்தோருக்கான நேர்முகத்தேர்வு, வருகிற 21ம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி சாய்சரன் தேஜஸ்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு விண்ணப்பித்துள்ள, விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் மற்றும் நேர்முகத்தேர்வு வருகிற 21-ம் தேதி செவ்வாய்க்கிழமை, காலை 6 மணிக்கு, நாமக்கல் மாவட்ட எஸ்.பி ஆபீஸ் பின்புறம் உள்ள, மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறுகிறது. ஊர்க்கால் படைக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களுடன் தவறாமல் நேரில் ஆஜராகவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News