நாமக்கல்: பிடாரிப்பட்டி தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் திறப்பு

நாமக்கல்: பிடாரிப்பட்டி தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் திறந்து வைக்கப்பட்டது.

Update: 2022-06-27 09:30 GMT

நாமக்கல் மாவட்டத்தில் கூடுதல் பள்ளி கட்டிடத்தை ராமலிங்கம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், பாச்சல் பஞ்சாயத்து பிடாரிப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில், ரூ. 15.47 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ள. இதன் திறப்பு விழாவிற்கு நாமக்கல் எம்.எல்.ஏ. ராமலிங்கம் தலைமை வகித்து, வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார். புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் கவுதம், ஊராட்சி ஒன்றிய குழுத் துணைத் தலைவர் ராம்குமார், தரணிபாபு, சக்திவேல், பாபு, பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதி, பஞ்சாயத்து தலைவர் சண்முகம் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News