நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுகவினர் விருப்பமனு அளித்தோரிடம் நேர்காணல் துவக்கம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுகவினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தோரிடம் நேர்காணலை துவக்கியுள்ளது.

Update: 2022-01-21 07:15 GMT

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில், திமுக சார்பில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான நேர்காணல் நிகழ்ச்சி மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமர் எம்.பி. தலைமையில் நடைபெற்றது. அருகில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் இளங்கோவன் ஆகியோர்.

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் நடைபெற உள்ள, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், நகராட்சி கவுன்சிலர் மற்றும் டவுன் பஞ்சாயத்து உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட விருப்பம் உள்ள, திமுக பிரமுகர்களிடம் ஏற்கனவே விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதையொட்டி விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நிகழ்ச்சி நாமக்கல் நளா ஹோட்டலில் துவங்கியது.

சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் முன்னிலை வகித்தார். மாவட்ட திமுக பொறுப்பாளரும், ராஜ்யசபா எம்.பியுமான ராஜேஷ்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து விருப்ப மனு அளித்தோரிடம் நேர்காணல் நடத்தினார். நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் இளங்கோ ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். விருப்ப மனு அளித்தவர்களை தனித்தனியாக அழைத்து நேர்காணல் நடத்தப்பட்டது. அப்போது அவர்களிடம் வெற்றி வாய்ப்பு, தேர்தல் செலவு உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

இன்று 21ம் தேதி காலை10 முதல் 12 மணிவரை ராசிபுரம் நகராட்சி தேர்தலில் வார்டு உறுப்பினர்களுக்கு போட்டியிட விருப்ப மனு அளித்தோரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. தொடர்ந்து வெண்ணந்தூர் டவுன் பஞ்சாயத்து, பிள்ளாநல்லூர் டவுன் பஞ்சாயத்து, அத்தனூர் டவுன் பஞ்சாயத்து, பட்டணம் டவுன் பஞ்சாயத்து, புதுப்பட்டி டவுன் பஞ்சாயத்து ஆகிய இடங்களில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர் காணல் நடைபெற்றது.

நாளை 22ம் தேதி சனிக்கிழமை காலை 9.30 முதல் 10.30 மணிவரை எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தோரிடம் நேர்காணல் நடைபெறும். தொடர்ந்து சேந்தமங்கலம் டவுன் பஞ்சாயத்து, காளப்பநாய்க்கன்பட்டி டவுன் பஞ்சாயத்து, நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்து, சீராப்பள்ளி டவுன் பஞ்சாயத்து, மோகனூர் டவுன் பஞ்சாயத்து, நாமக்கல் நகராட்சி ஆகிய பகுதிகளில்போடியிட விருப்ப மனு அளித்தோருக்கு நேர்காணல் நடைபெறும்.

Tags:    

Similar News