நாமக்கல்: போதைப்பொருள் வியாபாரிகளின் ரூ.2.45 கோடி சொத்துக்கள் முடக்கம்
Drug Dealer - நாமக்கல் மாவட்டத்தில் போதைப்பொருள் வியாபாரிகளின் ரூ.2.45 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டதாக போலீஸ் எஸ்.பி. தெரிவித்தார்.
Drug Dealer - நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட போலீஸ் எஸ்.பி சாய்சரண் தேஜஸ்வி கலந்துகொண்டு பேசியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டு வருகிறது. இதுவரை போதை பொருட்களை விற்பனை செய்தவர்களின் ரூ.2 கோடியே 45 லட்சம் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன. பொதுமக்கள் தங்கள் பகுதியில் போதை பொருட்கள் விற்பனை, பதுக்கி வைத்திருத்தல் மற்றும் விற்பனைக்காக ஆட்களை பிடிப்பது உள்ளிட்ட எந்த ஒரு நடவடிக்கை தெரிய வந்தாலும் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்து உதவ வேண்டும்/
இவ்வாறு அவர் கூறினார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2