மேகதாது அனை விவகாரம்: தமிழக அரசு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் கர்நாடகத்தில் மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது என விவசாயிகள் சங்கத்தினர் வேண்டுகோள்.

Update: 2022-06-22 11:30 GMT

வேலுசாமி, விவசாயிகள் சங்க தலைவர்.

இன்று 23ம் தேதி காவிரி நதி நீர் ஆணையத்தில் நடைபெற உள்ள, காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் கர்நாடகத்தில் மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது என விவசாயிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து நாராயண சுவாமி நாயுடு தமிழக விவசாய சங்க மாநல தலைவர் வேலுச்சாமி, நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- சில மாதங்கள் முன்பு கல்லணையில் ஆய்வு செய்து காவிரி நதிநீர் மேலாண்மை ஆணை தலைவர், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என்று கூறியிருந்தார். இதையொட்டி நாராயணசாமி நாயுடுவின் தமஙழக விவசாயிகள் சங்கம், மேகதாது அணை கட்டுவது குறித்து ஆணையத்தில் விவாதிக்கக் கூடாது. அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்காமல் தடுக்கும் வகையில் தமிழக அரசு மூத்த அதிகாரிகள் மற்றும் வக்கீல்களைக் கொண்டு தகுந்த வாதங்களை மு ன்வைத்து அணை கட்டுவதை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தோம். டெல்டா விவசாயிகளின் பாதுகாவலனாக இருக்கும் தமிழக அரசு, இன்று நடைபெற உள்ள கூட்டத்தில், உரிய வாதங்களை எடுத்துக்கூறி, மேகாதாது அணை கட்டுவதை தடுத்து தமிழக விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News