நாமக்கல் மாவட்டத்தில் இன்று 27 வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 27வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

Update: 2022-04-02 01:00 GMT

இது குறித்து, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில், 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, 15 லட்சத்து, 15 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை, முதல் தவணை தடுப்பூசி, 12 லட்சத்து, 65 ஆயிரத்து, 775 பேருக்கும் , இரண்டாம் தவணையாக 9 லட்சத்து, 39 ஆயிரத்து, 981 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை நடந்த, 26 மாபெரும் தடுப்பூசி முகாம்களில், 7 லட்சத்து, 53 ஆயிரத்து, 861 பேர் தடுப்பூசி செலுத்தி பயன்பெற்றனர்.

இன்று 2ம் தேதி சனிக்கிழமை, 27ம் கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. அனைத்து கிராம பஞ்சாயத்துகள், டவுன் பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணைசுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் மற்றும் அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள, 352 நிலையான முகாம்கள், 21 நடமாடும் குழுக்கள் என, மொத்தம், 373 முகாம்கள் நடக்கிறது.

இன்று காலை, 9 மணி முதல், மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும். இதுவரை ஒரு தவணை கூட தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களும், முதல் தவணை போட்டு, இரண்டாம் தவணைக்காக காத்திருப்பவர்களும், அருகில் உள்ள முகாம்களுக்கு சென்று தடுப்பூசி போட்டு பயன்பெறுமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News