நாமக்கல் அரசு பள்ளியில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்

நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

Update: 2021-12-09 02:15 GMT

நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற, போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மனநல மருத்துவர் முகிலரசி பேசினார்.

நாமக்கல் அரசு பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட, மருத்துவத்துறை, மனநல திட்டம் சார்பில், நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) ஜெகதீசன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நாமக்கல் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி முன்னிலை வகித்தார். மாவட்ட மனநல டாக்டர் முகிலரசி நிகழ்ச்சியில் பேசியதாவது:

பள்ளிக் குழந்தைகள் இண்டநெட் மூலம் நடைபெறும் விளையாட்டுகளுக்கு அடிமையாகி, அதிலேயே காலத்தை செலவழித்து, மனம் நலம் இழக்கின்றனர். அது உடலுக்கும் மனதுக்கும் தீங்கிழைக்கக் கூடியது எதிர்காலத்தை பாதித்து நிர்மூலமாக்க கூடியது. ஆல்கஹால் உள்ளிட்ட போதைப் பொருட்கள் தனி மனிதர்களுக்கு மட்டுமல்ல சமூகத்துக்கும் மிகப்பெரிய கேடு.

அதுபோலவே பெண் குழந்தைகளுக்கு எதிரான அத்துமீறல்கள் களையப்பட வேண்டும், அவர்கள் போற்றி பாதுகாக்கப்பட வேண்டும். நல்லதொரு நல்லதொரு சமூகம் மலர மாணவர்கள் உறுதுணை புரிய வேண்டும். உதவி தேவைப்படும் மாணவ, மாணவிகள், 1091 சைல்டு லைன் நம்பர். மற்றும் 181 , 100 போன்ற உதவி எண்களில் எப்பொழுதும் தொடர்பு கொள்ளலாம் என கூறினார். ஆசிரியர்கள் மற்றும் திரளான மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News