பரமத்தி வேலூரில் ரூ.1.81 லட்சத்துக்கு தேங்காயம் ஏலம்

தேசிய எலக்ட்ரானிக் வேளாண் மார்க்கெட்டில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது

Update: 2022-08-10 07:15 GMT

பைல் படம்

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் ரூ.1.81 லட்சம் மதிப்பில் தேங்காயம் ஏலம் போனது

பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் தேசிய எலக்ட்ரானிக் வேளாண்மை மார்க்கெட்டில், செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 10,156 கிலோ தேங்காய்களை, விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.24.74-க்கும், குறைந்தபட்சமாக ரூ.18.19-க்கும், சராசரியாக ரூ.23.89-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.2,44,505-க்கு வர்த்தகம் நடைபெற்றது. இந்தநிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 7,619 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.24.61-க்கும், குறைந்தபட்சமாக ரூ19.29-க்கும், சராசரியாக ரூ.23.60-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1,81,706 மதிப்பில் தேங்காய் விற்பனையானது.

Tags:    

Similar News