போதை கணவனை செருப்பால் தாக்கிய மனைவி: சமூக வலைதளங்களில் வைரல்

கரூரில் மதுபோதையில் டாஸ்மாக் அருகே மயங்கி விழுந்த கணவனை, மனைவி செருப்பால் அடித்த காட்சி சமூக வலைதளங்களில் வைரல்.

Update: 2021-08-31 10:00 GMT

போதையில் டாஸ்மாக் வாசலில் விழுந்த கணவனை செருப்பால் அடிக்கும் பெண்.

கரூர் தான்தோன்றிமலையில் உள்ள மதுபான கடைக்கு வந்த அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு, மதுபாட்டிலுக்கு கூடுதலாக பணம் வாங்கிய மதுபான கடை விற்பனையாளரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவரை கடை ஊழியர்கள் அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து போதையில் மயங்கி சாலையிலேயே அந்த நபர் விழுந்தார்.

அருகில் இருந்தவர்கள், மயங்கி விழுந்த நபரை பற்றி அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  இதையடுத்து டாஸ்மாக் கடை வாசலுக்கு வந்த அந்த நபரின் மனைவி போதையில் படுத்து கிடந்த கணவரை எழுப்ப முயன்றார். எழுப்ப முடியாத நிலையில் கோபமடைந்த அந்த பெண்மணி செருப்பை கழட்டி தன் கணவரை அடித்தார். இதைக் கண்ட அந்த பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மனைவி அடித்ததில்  அறைகுறையாக போதை தெளிந்த ஆசாமியை அவரது மனைவி இழுத்து சென்றார். இதை அந்தப் பகுதியில் இருந்த நபர்களால் செல்போன் மூலம் படம் எடுக்கப்பட்டு தற்சமயம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Tags:    

Similar News