கரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை

கரூர் மாவட்டத்தில் நேற்று இரவு மழை சுமார் ஒரு மணிநேரத்திற்கும் பரவலாக மேலாக பெய்தது.

Update: 2021-11-07 05:00 GMT

கரூரில் இன்று இரவு நல்ல மழை பெய்தது.

கரூர் மாவட்டத்தில் தீபாவளிக்கு முதல் நாள் வரை நல்ல மழை பெய்து வந்த நிலையில் தீபாவளி அன்றும், நேற்று முன்தினமும் மழை இல்லை. இதனையடுத்து நேற்று காலையில் இருந்து நல்ல வெயில் காணப்பட்ட நிலையில், இரவு 8 மணிக்கு மேல் திடீரென மழை பொழிய ஆரம்பித்தது. லேசாக பெய்த மழை சிறிது நேரத்தில் நல்ல மழையாக மாறியது. கரூர் நகரம், தாந்தோன்றிமலை, பசுபதிபாளையம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக நல்ல மழை பெய்தது. இரவு நேரம் என்பதால் வேலை முடிந்து வீடு திரும்பிய பலரும் வாகன ஓட்டிகளும் மழையில் நனைந்தவாறு சென்றனர். தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக நல்ல மழை பெய்ததால் தாழ்வான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

Tags:    

Similar News