சிறுமிக்கு பாலியல் தொல்லை : 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவு

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கரூர் மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பு.

Update: 2021-09-20 15:45 GMT

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் 20 ஆண்டு சிறைதண்டனை பெற்ற சரவணன்.

கரூர் மாவட்டம் உப்பிடமங்களம் பகுதியில் கடந்த 2019 ம் ஆண்டு பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய 3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு அதே பகுதியை  சேர்ந்த சரவணன் ஆசை வார்த்தை கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். இச்சம்பவம் குறித்து வெள்ளியணை காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். இது தொடர்பாக சரவணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு கரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனை விசாரித்த நீதிபதி நசீமா பானு, குற்றவாளி சரவணனுக்கு  குழந்தைகளுக்கு  எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 20 ஆண்டு சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும், கட்டத் தவறினால் மேலும்  ஒரு  ஆண்டு சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 லட்ச ரூபாய் நிவாரண தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார். 

Tags:    

Similar News