உபி.,யில் விவசாயிகள் கொலையை கண்டித்து கரூரில் ஆர்ப்பாட்டம்

உத்தரபிரதேசத்தில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கரூரில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

Update: 2021-10-04 16:45 GMT

உ.பி யில் விவசாயிகள் கொல்லப்பட்டதைக் கண்டித்து ஆர்பாட்டம் நடத்தும் காங்கிரஸ் உள்ளிட்ட அமைப்பினர்.

உத்திரபிரதேசத்தில் 3 வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாயிகள் நடத்திய பேரணியில் மத்திய இணை அமைச்சர் மகன் சென்ற கார் மோதியது.  அப்போது ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள், 4 பாஜகவினர் உயிரிழந்தனர். வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகளில் 4 பேர் கொல்லப்பட்டது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்க சென்ற காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதை கண்டித்தும், விவசாயிகள் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சுய ஆட்சி இந்தியா, சாமானிய மக்கள் நல கட்சி, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஈடுபட்டன.

ஆர்ப்பாட்டத்தில் 3 வேளாண் சட்டங்கள் குறித்து கடந்த 9 மாதங்களாக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், உச்ச நீதிமன்றமே விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக முடிவு எடுக்கும்படி மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து முழக்கம் எழுப்பினர்.

Tags:    

Similar News