மாநிலத் தலைவர் அல்ல, முதன்மை சேவகன்: அண்ணாமலை

திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க கரூர் வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2021-11-15 08:00 GMT

கரூர் வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று கரூரில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது கரூர் மாவட்ட புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில்நாதன், கரூர் பேருந்து நிலைய பகுதியில் அண்ணாமலைக்கு பிரமாண்டமான வரவேற்பு அளித்தார். அப்போது அண்ணாமலை தொண்டர்களிடையே பேசியதாவது:

கரூர் மாவட்டத்திற்கு ஒரு புதுவிதமான அரசியல் தேவைப்படுகிறது. யாரையும் மிரட்டாமல் லஞ்ச லாவண்யம் இல்லாத ஒரு அரசியல் தேவை. தொழிலதிபர் முதற் கொண்டு விவசாயிகள் வரை அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுக்க வேண்டியது நமது கடமை. பாரதிய ஜனதா கட்சி புதியவர்களைக் கூட வரவேற்று கட்சிப் பொறுப்புகளை அளித்து வருகிறது.

பாஜகவை பொருத்தவரை பதவி என்பது ஒரு பொறுப்பு. நான் கூட என்னை மாநில தலைவர் என்று சொல்லிக் கொள்வதில்லை, மாநிலத்திலேயே சேவை செய்யக்கூடிய முதன்மை சேவகன் என்றுதான் சொல்வேன். நம்முடைய வேலையை நாம் செய்து கொண்டிருந்தால் பாஜக-வை பொருத்தவரை பொறுப்புகள் தேடி வரும். இவ்வாறு பேசினார்.

Tags:    

Similar News