களை கட்டிய தீபாவளி :மக்கள் கூட்டத்தால் வியாபாரிகள் உற்சாகம்

கரூரில் தீபாவளி பண்டிகைக்காக பொதுமக்கள் அதிக அளவில் ஜவுளி பொருட்களை வாங்கு திரளுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Update: 2021-10-31 16:00 GMT

ஜவுளி பொருள்களை வாங்க கரூர் ஜவகர் பஜாரில் திரண்டு வந்து செல்லும் பொதுமக்கள்.

கரூரில் தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் வாங்க அதிக அளவில் திரண்டதால் கடைவீதிகள் களைகட்டியுள்ளன.

வருகின்ற 4-ம் தேதி தீபாவளி பண்டிகை வர உள்ளதால், கரூர் மாவட்டத்தில் முக்கிய வீதியான ஜவகர் பஜார்,மேற்கு பிரதட்சணம் சாலை,பாரதியார் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகளில் இன்று தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் பொருட்கள் வாங்க குவிந்த வண்ணம் இருந்தனர். அதாவது ஜவகர் பஜார் பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.

வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு அவ்வப்போது லேசான மழை பெய்தாலும் மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தவாறு பொதுமக்கள் தீபாவளிக்கு தேவையான ஜவுளி உள்ளிட்ட பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்.

நகர் முழுவதும் 100 க்கும் அதிகமான தற்காலிக தரைக் கடைகள் அமைக்கப்பட்டு ஜவுளி பொருள்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. இதனால் வியபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags:    

Similar News