கரூரின் முதல் மேயருக்கு வழங்கப்பட்டது செங்கோல்

கரூரின் முதல் மேயருக்கு செங்கோல் வழங்கப்பட்டது.

Update: 2022-03-04 23:45 GMT

மாநகராட்சியின் முதல் மேயரும், பெண் மேயருமான கவிதா கணேசன், பதவி ஏற்றுக் கொண்டார். 

தமிழக அளவில், நேற்று மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்வு நடைபெற்றது. கரூர் நகராட்சி, மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்ட பின்னர், அதே நாற்பத்து எட்டு வார்டுகளுக்கும் நகரமைப்பு உள்ளாட்சி தேர்தலாக நடைபெற்றது.

இந்நிலையில், மாமன்ற உறுப்பினர்கள் கடந்த இரண்டாம் தேதி அன்று நாற்பத்தெட்டு மாமன்ற உறுப்பினர்களும் பதவி பிரமாணம் எடுத்து கொண்டனர். நேற்று, மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், உத்திரவின்படி, மாநகராட்சியின் முதல் மேயரும், பெண் மேயருமான கவிதா கணேசன்,  மேயராக  பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு செங்கோல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து அனைவரும் புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்.  

Tags:    

Similar News