கரூர் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை எம்பி ஜோதிமணி வழங்கினார்
கரூர் எம்பி ஜோதிமணி 10 ஆக்சிசன் செறிவூட்டிகளை கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இன்று வழங்கினார்
கரூர் எம்பி ஜோதிமணி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, # Help Karur Breathe என்ற ஹேஸ்டேக் மூலம் இணையவழியில் நிதி திரட்டினார் இதற்கு இதுவரை சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான தொகை சேர்ந்துள்ளது.
இதன் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 20 நபர்கள் பயன்பெறும் வகையில் 10 ஆக்சிஜன் செறிவூட்டிகளை மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துச்செல்வனிடம் இன்று அவர் வழங்கினார்.
தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கையில் #HelpKarurBreathe அமைப்பின் மூலம் நிதி திரட்டப்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொரோனா நோயாளிகளைக்காக ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன. இன்றைய நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போதுமான ஆக்சிஜன் உள்ளன. எனவே இனி அடுத்த கட்டமாக கொரோனா ஊரடங்கில் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உணவுக்கு வழியில்லாமல் இருக்கும் ஏழை மக்களுக்காக உணவு அளிக்கும் திட்டத்தை தொடங்க உள்ளோம் என்றார்.