புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி கண்டனம்

தவறான செய்திகளை ஒளிபரப்பியதாக புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2022-01-31 12:49 GMT

கரூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கை.

கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் மாவட்ட தலைவர் சின்னசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ஜோதிமணிக்கு கரூர் மாவட்ட காங்கிரஸ் கண்டனம் என்று புதிய தலைமுறை ஊடகத்தில் வந்துள்ள செய்தியை நாங்கள் மறுக்கின்றோம், எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எளிய பின்னணியில் இருந்து அரசியலுக்கு வந்து வலிமையாகவும், அர்ப்பணிப்போடும் மக்களுக்கு பணியாற்றுபவர் ஆவார். எளிமையும், நேர்மையும் மிகுந்த ஒரு போராளி. காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் கரூர் தொகுதி மக்களின் அன்பிற்குரியவர். அவர் மீது இதுபோன்று கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பெயரால் அவதூறு பரப்புவது ஏற்புடையது அல்ல. ஊடக அறமும் அல்ல. இது போன்ற செய்திகளை வெளியிடும் போது பொறுப்புடனும், உண்மைத்தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி கமிட்டியின் தலைவர் என்கின்ற முறையில் கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News