நகரமைப்பு உள்ளாட்சி தேர்தலில் கரூர் மாவட்ட அதிமுக மும்மரம்

அதிமுக நகரக்கழக, கிளைக்கழக நிர்வாகிகளுக்கு உள்ளாட்சித் தேர்தலில் மக்களிடம் எவ்வாறு அணுக வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.

Update: 2022-01-28 07:44 GMT
நேர்காணலில் கலந்து கொண்ட அதிமுக நிர்வாகிகள்.

கரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 195 வார்டுகளிலும் போட்டியிடும் கழக தொண்டர்களிடம் கரூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அலுவலகத்தில், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக கழக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில், நேர்காணல் செய்து வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து அதிமுக நகரக்கழக, கிளைக்கழக நிர்வாகிகளுக்கு உள்ளாட்சித் தேர்தலில் மக்களிடம் எவ்வாறு அணுக வேண்டும் என்று வெற்றி வியூகங்கள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

இதில் விருப்பமான அளித்த அதிமுக தொண்டர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்த நேர்காணல் ஆனது இன்று துவங்கி நாளை வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் காளியப்பன், மாவட்ட துணை தலைவர்கள் பசுவை சிவசாமி, சசிகலா ரவி, மாவட்ட பொருளாளர் கண்ணதாசன், மத்திய நகர செயலாளர் நெடுஞ்செழியன், முன்னாள் கரூர் தொகுதி பொறுப்பாளர் திருவிக, கழக பொது குழு உறுப்பினர் மல்லிகா சுப்பராயன் ஆகியோர் உள்ளிட்ட நகர கழக, பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News