கரூர் மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா பாதிப்பு
கரூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில், 18 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றை கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. அவ்வகையில் இன்று மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட பரிசோதனையில், புதியதாக 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து இன்று 8 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 170 பேர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையிலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.