காரியாம்பட்டியில் அங்காளப்பரமேஸ்வரி கோவிலில் சிறப்பு!

காரியாம்பட்டி அங்காளப்பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2023-06-11 03:45 GMT

காரியாம்பட்டி அங்காளப்பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கரூர் மாவட்டம் கரியாம்பட்டி அருகே அமைந்துள்ளது புன்னம் சத்திரம் எனும் ஊர். இந்த ஊரில் அமைந்துள்ள சக்தி வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

இந்த கோவிலில் வைகாசி மாத கடைசி வெள்ளிக்கிழமையில் சிறப்பு வழிபாடுடன் பூஜையும் நடைபெறுவது வழக்கம். இந்த நாளை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

அதே போல் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட தீபாராதனையும் பார்க்கப்பட்டது.

Tags:    

Similar News