கரூர் மாவட்டத்தில் இன்று (8ம் தேதி) 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கரூர் மாவட்டத்தில் இன்று 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கண்டறியும் பரிசோதனை முகாம் மாவட்டம் முழுவதும் தினசரி நடத்தப்படுகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற கொரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை முகாமில் 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து கொரோனா சிகிச்சை முடிந்து 13 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். உயிரிழப்பு ஏதும் இல்லை.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 159 பேர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவ மனை மற்றும் வீடுகளின் தனிமைப்படுத்துதலில் உள்ளனர்.