அரசு கிராமப்புற செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

மருத்துவ வழிகாட்டுதலுக்கு மாறாக வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கைவிட செவிலியர்கள் வலியுறுத்தல்.

Update: 2021-11-19 07:00 GMT

ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு செவிலியர்கள்.

மருத்துவ வழிகாட்டுதலுக்கு மாறாக வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 100 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஆட்சியர் அலுவலக முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிராமபுறங்களில் பணியாற்றும் தமிழ்நாடு அரசு செவிலியர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மருத்துவ வழிகாட்டுதலுக்கு மாறாக வீடு, வீடாக சென்று மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கைவிட வேண்டும்.

தாய், சேய் நலப் பணி பாதிக்காத வகையில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை அளிக்க வேண்டும். முழு வீரியத் தன்மையுடன் பொதுமக்களுக்கு கோவிட் 19 தடுப்பு மருந்து கிடைப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். சமுதாய நல செவிலியர்களுக்கு 50 சதவீத தாய் சேய் நல அலுவலர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் முழக்கம் எழுப்பினர்.

Tags:    

Similar News