ஜெயலலிதா பல்கலை. விவகாரம் : முன்னாள் அமைச்சர், அதிமுகவினர் கைது

ஜெயலலிதா பல்கலையை அண்ணாமலை பல்கலையுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கைது

Update: 2021-08-31 11:58 GMT

கரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர்.

ஜெயலலிதா பெயரில் உள்ள பல்கலைக் கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு அதிமுக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதை கண்டித்து சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓ பன்னீர்செல்வம் உட்பட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, கரூரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கட்சி அலுவலகத்தில் இருந்து பேரணியாக வந்து கரூர் பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் ஜெயலலிதா பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் அவர்கள் முழக்கம் எழுப்பினர்.இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News