கரூரில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த தச்சு தொழிலாளி பலி
கரூரில் புதிய வீட்டு கட்டிடத்தில் இரண்டாவது தளத்திலிருந்து தடுமாறி கீழே விழுந்த தச்சு தொழிலாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கரூர் நவலடி நகரில். செல்லமுத்து என்பவருக்கு சொந்தமான புதிய கட்டட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கட்டடத்தின் தச்சு வேலைகளை. ஈரோடு மாவட்டம், பெரியசேமூரை சேர்ந்த மகேஸ்வரன் (45) என்பவர் கட்டத்திலேயே தங்கி பார்த்து வந்தார்.
நேற்று இரவு மொட்டை மாடியில் சென்று தூங்குவதற்கு இரண்டாவது தளத்தில் சென்று கொண்டிருந்தபோது தடுமாறி கீழே விழுந்ததில் முதுகுப் பகுதியில் அடிபட்டு பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வாங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.