கரூர்: எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பிரசாரம் பிப். 11ம் தேதிக்கு மாற்றம்

கரூரில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பிரசாரம், பிப்ரவரி 11ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-02-09 00:30 GMT

அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி, 21 மாநகராட்சிகளில், அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். கரூர் மாநகராட்சியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று 08 ஆம் தேதி செவ்வாய் அன்று மதியம் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பிரசாரம் செய்வதாக இருந்தது. ஆனால், பிரசார தேதி வரும், 11க்கு மாற்றப்பட்டுள்ளது.

அதேபோல், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணை தலைவருமான பன்னீர் செல்வம் வரும், 10 ஆம் தேதி இரவு, 7:00 மணிக்கு கரூர் மாநகராட்சியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். இதனிடையே, அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து மாவட்ட அளவில் ஆங்காங்கே மாவட்ட செயலாளரும் முன்னாள் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம் ஆர் விஜயபாஸ்கர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News