கரூர் மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது
கரூர் மாவட டத்தில் 22 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 16 குணமடைந்து வீடு திரும்பினர்.
கரூர் மாவட்டத்தில் இன்று 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கரூர் மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றை கண்டறியும் முகாம் நடத்தப்படுகிறது. இந்த வகையில் இன்று மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட பரிசோதனையில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் குணமடைந்த 16 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 212 பேர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையிலும், வீடுகளில் தனிமைப்படுத்ததிலும் உள்ளனர்.