தமிழ் கடவுள் வேடமணிந்து கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்

கடவுள் வேடமணிந்த நாடக நடிகர்கள் நாளை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Update: 2021-10-09 10:15 GMT

கடவுள் வேடமணிந்து கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாடக நடிகர்கள்.

கரூரில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியம் குறித்து தமிழ் கடவுள் முருகன் மற்றும் சிவன் பார்வதி வேடம் அணிந்த நாடக கலைஞர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

கரூர் மாவட்டத்தில் நாளை கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தடுப்பூசி முகாம் நடைபெறுவதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதின் அவசியத்தை வலியுறுத்தி 50 இருசக்கர வாகனங்களில் நகராட்சி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கலந்து கொண்டு நகரை சுற்றி இருசக்கர வாகனத்தை இயக்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இதேபோல, காந்திகிராமம் பகுதியில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதின் முக்கியத்துவம் குறித்து தமிழ் கடவுள் முருகன், சிவன், விஷ்ணு, பார்வதி, எமதர்மன் வேடம் அணிந்த நாடக கலைஞர்கள் ஒப்பனையுடன் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News