பாஜகவில் தலைவர், தொண்டர் சமம்: கரூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
பாஜகவில் தலைவர் தொண்டர் எல்லோரும் சமம் என கரூரில் பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்க உள்ள அண்ணாமலை பேச்சு.
பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்க கோவையிலிருந்து சென்னை செல்லும் அண்ணாமலைக்கு கரூர் வேலாயுதம்பாளையம், வெங்கமேடு, கரூர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பாஜகவினர் 500 க்கும் மேற்பட்டோர் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். அப்போது அண்ணாமலை பேசுகையில், மாநிலத் தலைவராக இந்த கட்சியை வளர்க்க வேண்டும் பாஜகவில் தலைவர் தொண்டர் என்ற வித்தியாசம் இல்லை. எல்லோரும் சமம். கரூர் மாவட்டத்தில் பாஜகவின் அரசியல் வித்தியாசமாக இருக்கும். இன்னும் 6 மாதத்தில் கரூர் மாவட்டத்தில் வித்தியாசமான அரசியலை காணலாம். அசுர பலத்துடன் பாரதிய ஜனதா கட்சி வளர்ச்சி பெறும் என பேசினார்.