ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் வங்கியில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி

Update: 2021-04-21 16:45 GMT

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் வங்கியில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து. வங்கி முழுவதும் கி்ருமி நாசினி தெளிக்கப்பட்டது. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 42 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வங்கியில் பணியாற்றும் பிற ஊழியர்கள், மற்றும் பாதிக்கப்படவரின் உறவினர்களிடமும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

இன்றைய நிலவரப்படி கரூர் மாவட்டத்தில் புதிதாக 39 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கொரோனா பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் பொதுமக்கள் ஊழியர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதித்த பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.

Tags:    

Similar News