தமிழக அளவில் முதலிடம்: கரூர் கலெக்டருக்கு விருது வழங்கிய முதல்வர்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையில் தமிழக அளவில் முதலிடம் வகித்ததற்காக, கரூர் கலெக்டருக்கு, முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கினார்.

Update: 2022-03-12 11:30 GMT

மாவட்ட ஆட்சியர் மருத்துவர் பிரபு சங்கருக்கு விருதினை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக மாநில அளவில் முதல் இடத்திற்கான விருதினை,  கரூர் மாவட்டத்திற்கு, மாவட்ட ஆட்சியர் மருத்துவர் பிரபுசங்கருக்கு விருதினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும், தமிழக முதல்வருக்கும், திறன் மேம்பாட்டிற்கான மகத்தான திட்டங்களை செயல்படுத்த உரிய வழிகாட்டுதல்களை வழங்கி ஊக்குவித்த மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருக்கு, கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்,  மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டுள்ளார்.

Tags:    

Similar News