மது விலக்கு குற்ற வழக்குகள் தொடர்புடைய வாகனங்கள் ஏலம்

கரூரில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 45 வாகனங்கள் இன்று ஏலம் விடப்பட்டன.

Update: 2021-10-05 16:45 GMT

மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்பட்டன.

கரூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பயன்படுத்தப்பட்ட 38 இருசக்கர வாகனங்களும், 7 நான்கு சக்கர வாகனங்களும் மொத்தம் 45 வாகனங்கள் அரசுடைமையாக்கப்பட்டிருந்தன. இந்த வாகனங்கள் இன்று அரசு விதிமுறைபடி பொது ஏலத்தில் விற்கப்பட்டன. மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற ஏலத்தில் இருசக்கர வாகனங்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும், 4 சக்கர வாகனங்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் முன்பணம் செலுத்திய 101 நபர்கள் பொது ஏலத்தில் கலந்து கொண்டனர். ஒவ்வொரு வாகனமாக ஏலம் விடப்பட்டது. 45 வாகனங்களும் ரூ. 11,33,464 க்கு ஏலம் விடப்பட்டது. இந்த தொகை அரசு உடமையாக்கபட்டது. மேலும், ஏலம் எடுத்த நபர்களுக்கு உரிய சான்றிதழ்களுடன் வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டன.

Tags:    

Similar News