போக்குவரத்து ஊழல் குறித்து வழக்கு : செந்தில்பாலாஜி

Update: 2021-03-03 12:15 GMT

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கரூரில் போக்குவரத்து துறையில் நடைபெற்ற ஊழல் குறித்து ஆதாரங்களுடன் வழக்கு தொடரப்படும் என எம்எல்ஏ செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

கரூரில், திமுக தேர்தல் பணிமனை மற்றும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் விழா ஆகியவற்றுக்கு கால்கோள் நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திமுக மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி எம்எல்ஏ செய்தியாளர்களிடம் பேசுகையில், வரும் 8 தேதி கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி உங்கள் தொகுதியில் ஸ்டாலின் கூட்டம் நடைபெறுகிறது.

கரூர் ராயனூரில் நடைபெறும் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு மக்களிடம் மனு பெற்று பேசுகிறார்.கரூர் மாவட்ட கலெக்டர் மலர்விழி அதிமுக வேட்பாளர் போல் செயல்பட்டு வருகிறார். ஒரு தலை பட்சமாக நடந்து வருகிறார். திமுக வெற்று பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் கரூரில் போக்குவரத்து துறையில் நடந்த ஊழல் குறித்து வழக்கு தொடரப்படும் என்றார்.

Tags:    

Similar News