திமுக வாக்காளர்களை நீக்க முயற்சி , செந்தில்பாலாஜி

Update: 2021-01-23 09:00 GMT

கரூரில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகும் வாக்குச்சாவடி முகவர்களை பயன்படுத்தி திமுகவினர் வாக்குகளை நீக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளதாக எம்எல்ஏ செந்தில் பாலாஜி கூறினார்.

கரூரில் திமுக மாவட்ட பொறுப்பாளரும் எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த 21ஆம் தேதி வெளியிடப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகும் கரூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்களை பயன்படுத்தி திமுக வாக்குகளை நீக்குவதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இப்போது, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு அவர்களுக்கு வேலை இல்லை. தொடர்ந்து இதே போல ஆட்சியரும் அதிகாரிகளும் சட்டத்துக்குப் புறம்பாக செயல்பட்டால் இன்னும் மூன்று மாதத்திற்கு பிறகு திமுக ஆட்சி தான். அப்போது இவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்போம் .கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் தவறு செய்ய நினைப்பவர்கள் தவறு செய்ய உத்தரவிடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Tags:    

Similar News