கரூர் மாநகராட்சியின் முதல் புதிய மேயர், துணை மேயர் பதவி ஏற்பு
கரூர் மாநகராட்சியின் முதலாவது புதிய மேயர், துணை மேயர் ஆகியோர், இன்று பதவியேற்றனர்.
கரூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, உறுப்பினர் தேர்தல் நடைபெற்றது. பெண் மேயர் தேர்வு மற்றும் துணை மேயர் தேர்வு, நேற்று கரூர் மாநகராட்சி புதிய கட்டடத்தில் நடைபெற்றது. முதல் பெண் மேயராக கவிதா கணேசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
மேயர் கவிதா கணேசனுக்கு, மேயருக்கான அங்கி வழங்கப்பட்டு செங்கோல் வழங்கப்பட்டது. இன்று பிற்பகலில் துணை மேயர் பொறுப்புக்கு தாரணி சரவணன் தேர்வு செய்யப்பட்டார். இருவருக்கும் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.