குடியரசு தினத்தை முன்னிட்டு விருதுநகர் ரயில் நிலையத்தில் தீவிர சாேதனை
குடியரசு தினத்தை முன்னிட்டு விருதுநகர் ரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
குடியரசு தினத்தை முன்னிட்டு விருதுநகர் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு. இருப்புப் பாதைகள் மற்றும் ரயில்களில் பயணிகளின் உடமைகளில் பரிசோதனை.
இந்தியா முழுவதும் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினத்தன்று எந்த ஒரு அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க தமிழக முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் கோவில்கள் பேருந்து நிலையங்கள் என பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக விருதுநகர் இரயில் நிலையம் மற்றும் முக்கிய ரயில் பாதைகளில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ரயில்வே காவல் ஆய்வாளர் பிரியா மோகன் அவர்கள் தலைமையில் விருதுநகர் ரயில் நிலையத்தில் ரயிலில் வந்த பயணிகளின் உடமைகளை பரிசோதித்த பின்பே அனுமதிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து ரயில்களில் வரும் பயணிகளின் உடமைகளையும் காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.