விருதுநகர் மாவட்டத்தில் கோவாக்சின் தட்டுப்பாடு
விருதுநகர் மாவட்டத்தில் கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இரண்டாவது டோஸ் செலுத்த முடியாமல் பொதுமக்கள் தவிப்பு
HIGHLIGHTS
விருதுநகர் மாவட்டத்தில் முதற்கட்டமாக கொரோனா தொற்று தடுப்புக்கான கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் 91 மையங்களில் வைத்து செலுத்தப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லாததால் முதல் டோஸ் போட்டு கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் செலுத்தப்படுகிறது. ஆனால் கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் முதல் டோஸ் கோவாக்சின் போட்டு கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் செலுத்த முடியாமல் அலைகழிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தடுப்பூசி போட்டு கொள்ள வந்தவர்களின் ஆதார் அட்டை எண், பெயர், முகவரியை பதிவு செய்து தடுப்பூசி வந்ததும் அழைப்பதாக திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இதனால் நீண்ட தொலைவில் இருந்து வரும் முதியோர் பெண்கள் உள்ளிட்டோர் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளானார்கள்.
இந்நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாமல் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.