விருதுநகரில் வளர்ச்சி திட்ட பணிகளை மத்திய அரசின் கூடுதல் செயலாளர் ஆய்வு
விருதுநகர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை மத்திய அரசு பழங்குடியினர் நலத்துறையின் கூடுதல் செயலாளர் நேரில் ஆய்வு.
HIGHLIGHTS
விருதுநகர் மாவட்டம் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விருதுநகர் முன்னேற விழையும் மாவட்டத்திற்கான மத்திய அரசின் பொறுப்பு அதிகாரி மத்திய அரசு பழங்குடியினர் நலத்துறையின் கூடுதல் செயலாளர் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி, முன்னிலையில், விருதுநகர் முன்னேற விழையும் மாவட்டத்திற்கான மத்திய அரசின் பொறுப்பு அதிகாரி மத்திய அரசு பழங்குடியினர் நலத்துறையின் கூடுதல் செயலாளர் ஜெயா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மதுரை ரோட்டில் உள்ள வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூட கிட்டங்கியில் இ-நாம் (நு-Nயுஆ) திட்டத்தில் பதிவு செய்தல் மற்றும் பருத்தி, மிளகாய், உளுந்து, மல்லி, மக்காச்சோளம் ஆகியவற்றை தரமறிதல் செயல்முறை விளக்கத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், குல்லூர்சந்தையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ரூ.5.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குல்லூர்சந்தை சமுதாய சுகாதார வளாகம் பணிகளையும், சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் இருக்கன்குடியில் மியாவாக்கி முறையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்தின் கீழ், ரூ.19.47 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பசுமை மரம் நடுதல் பணிகளை விருதுநகர் முன்னேற விழையும் மாவட்டத்திற்கான மத்திய அரசின் பொறுப்பு அதிகாரி மத்திய அரசு பழங்குடியினர் நலத்துறையின் கூடுதல் செயலாளர் ஜெயா. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சிகளில், திட்ட இயக்குநர் திலகவதி, செயற்பொறியாளர் சக்தி முருகன், உதவி செயற்பொறியாளர் சிவகாமி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.