Begin typing your search above and press return to search.
அரசு தலைமை மருத்துவமனையில் அமைச்சர்கள் ஆய்வு.
கொரோனோ சிகிச்சை குறித்து ...
HIGHLIGHTS
விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனோ சிகிச்சை குறித்து அமைச்சர்கள் ஆய்வு நடத்தினர்
விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கொரனோ நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் மற்றும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் படுக்கை வசதிகளை வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகள் குறித்தும் ஆக்சிஜன் கையிருப்பு குறித்தும் மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.
மேலும் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிப்பதை மருத்துவர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.