/* */

ஏழைகளின் குளிர்சாதன பெட்டி மண்பானைகள் விற்பனை அமோகம்

கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரிப்பதால் ஏழைகளின் குளிர்சாதன பெட்டியான மண் பானைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

HIGHLIGHTS

ஏழைகளின் குளிர்சாதன பெட்டி மண்பானைகள் விற்பனை அமோகம்
X

விழுப்புரத்தில் விறுவிறுப்பாக நடைபெறும் மண்பானை விற்பனை

விழுப்புரம் மாவட்டத்தில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. தற்போது கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இளநீர், கரும்புச்சாறு, மோர் போன்றவற்றை பொதுமக்கள் பருகி ஓரளவு வெப்பத்தை தணித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நீர்சத்து நிறைந்த தர்பூசணி பழம், வெள்ளரிப்பழம் ஆகியவற்றையும் சாப்பிட்டு வருகின்றனர்.

இதனால் குளிர்பான கடைகளிலும், சாலையோரம் உள்ள இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், வெள்ளரிப்பழம் மற்றும் கரும்புச்சாறு ஆகியவை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள இடங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் குளிர்சாதன பெட்டியாக திகழும் மண் பானைகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

விழுப்புரம் அருகே உள்ள சாலைஅகரம், ராகவன்பேட்டை ஆகிய இடங்களில் மண்பாண்ட தொழிலாளர்களால் தயார் செய்யப்பட்டு சாலையோரத்தில் மண் பானைகள் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இங்கு சாதாரண மண் பானைகள், குழாய் பொருத்தப்பட்ட மண் பானைகள் மற்றும் சிறிய அளவிலான குடுவைகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

இதில் சாதாரண மண்பானைகள் ரூ.80-ல் இருந்து ரூ.200 வரையும், குழாய் பொருத்தப்பட்ட மண்பானைகள் ரூ.150-ல் இருந்து ரூ.350 வரையும், குடுவைகள் ரூ.50-ல் இருந்து ரூ.100 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் வாங்கிச்சென்ற வண்ணம் உள்ளனர்.

Updated On: 24 March 2022 6:04 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  2. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  3. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  4. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  5. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  7. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  8. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...