/* */

தி.மலை கோட்ட தபால் நிலையங்களில் செல்வமகள் சேமிப்பு கணக்கு சிறப்பு முகாம்

பொன்மகன் சேமிப்பு கணக்கு மற்றும் செல்வமகள் பொது வைப்பு நிதி தொடங்க வரும் செப். 27ம் தேதி முதல் அக்.21 ம் தேதி வரை சிறப்பு முகாம்.

HIGHLIGHTS

தி.மலை கோட்ட தபால் நிலையங்களில் செல்வமகள் சேமிப்பு கணக்கு சிறப்பு முகாம்
X

பைல் படம்.

இதுகுறித்து திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அமுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:

பொன்மகன் சேமிப்பு கணக்கு மற்றும் செல்வமகள் பொது வைப்பு நிதி தொடங்க வரும் திங்கட்கிழமை 27ம் தேதி முதல் அடுத்த மாதம் 21ம் தேதி வரை சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு குறைந்த பட்ச வைப்பு நிதியாக ரூபாய் 250 செலுத்தி செல்வமகள் சேமிப்புக் கணக்கைத் தொடங்கலாம். பெண் குழந்தையின் மேல்படிப்பு, திருமணம் போன்ற தேவைகளுக்கு இத்திட்டத்தில் சேமிக்க முடியும்.

அதேபோல் ஆண் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 500 செலுத்தி பொன்மகன் சிறப்பு சேமிப்பு கணக்கை தொடங்கலாம். பொருளாதாரத்தில் பின் தங்கிய 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை இத்திட்டத்தில் சேர்க்க சமூக ஆர்வலர்கள் தங்கள் பகுதியில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு உதவி செய்யலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 25 Sep 2021 8:10 AM GMT

Related News