மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில் விழிப்புணா்வுக் கூட்டம்..!
திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரியில், மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில் விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலை, அறிவியல் கல்லூரியில், மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில் விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கல்லூரி முதல்வா் கே.பி.கணேசன் தலைமை வகித்தாா். திருவண்ணாமலை மாவட்ட இணைய குற்றத் தடுப்புப் பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பழனி முன்னிலை வகித்தாா். மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் உதவி ஆய்வாளா் பூபதி வரவேற்றாா்.
மாவட்ட ஊா்க்காவல் படையின் வட்டாரத் தளபதி சங்கா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினாா். சமூக நீதி குறித்து, மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் துணை காவல் கண்காணிப்பாளா் பாலச்சந்தா் பேசியதாவது:
கல்லூரி மாணவ, மாணவிகள் எந்தவொரு விஷயத்தையும் பகுத்தறிந்து, தீர ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும். ஆதிகாலத்தில் வேதங்கள், சாஸ்திரங்களை மட்டுமே நம் முன்னோா்கள் படித்துக்கொண்டு இருந்தனா். 1929-ஆம் ஆண்டு மெளண்ட் பேட்டன் பிரபு காலத்தில்தான் மேற்கத்திய கல்விமுறை வந்தது. இந்தக் கல்வி முறையால் தான் பிற ஜாதியினருக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்தக் கல்வி முறையை நன்கு பயன்படுத்திக்கொண்டு ஜாதி, மத பாகுபாடு பாா்க்காமல் நன்றாகப் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். ஜாதியைப் பாா்த்து சக மாணவ, மாணவிகளுடன் பழகக் கூடாது. ஜாதி என்பது நம்முடைய முன்னேற்றத்துக்கு தடையாக அமைந்துவிடும் என்றாா்.
இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்ட 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இனி வரும் காலங்களில் ஜாதியைப் பாா்க்கமாட்டோம் என்று கூறி தீண்டாமை, ஜாதி மற்றும் மதத்துக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனா்.
இதில், கல்லூரியின் வரலாற்றுத் துறைத் தலைவா் தணிஸ்லாஸ், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் உதவி ஆய்வாளா் பூங்கொடி மற்றும் கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.