Begin typing your search above and press return to search.
இந்த மாதமும் கிரிவலம் செல்ல தடை
திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் பொதுமக்கள் வரவேண்டாம் என கலெக்டர் அறிவிப்பு
HIGHLIGHTS
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு சில தளர்வுகளுடன் நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது, நோய்த் தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு 31.10.2021 காலை 06.00 மணி வரை நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் நடைபெறும் நாட்களான 19.10.21 முதல் 21.10.21 வரை திருவண்ணாமலை மலை சுற்றும் பாதையில் 14 கி.மீ. கிரிவலம் வருவதற்கு அனுமதிஅளிக்கப்படவில்லை.
ஐப்பசி மாத பௌர்ணமி அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேக வைபவம் மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கிரிவலத்திற்கு தடை உள்ள நிலையில் அன்னாபிஷேக வைபவத்தை கோவில்களில் தரிசிக்க முடியுமா என்று பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.