Begin typing your search above and press return to search.
தாமிரபரணி தூய்மைப்படுத்தும் பணி: தீயணைப்புத்துறை அலுவலருக்கு ஆட்சியர் பாராட்டு
நெல்லையில் தாமிரபரணி ஆறு தூய்மைப்படுத்தும் பணியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய தீயணைப்புத் துறை அலுவலரை பாராட்டி ஆட்சியர் விஷ்ணு சான்றிதழ் வழங்கினார்.
HIGHLIGHTS
திருநெல்வேலி மாவட்டத்தில் "தூய பொருநை நெல்லைக்கு பெருமை" என்பதை வலியுறுத்தி மாபெரும் தூய்மைபடுத்தும் பணி கடந்த 23ம் தேதியன்று தாமிரபரணி நதியில் 57 இடங்களில் நடைபெற்றது.
இப்பணியில் ஆயிரக்கணக்கான மாணவர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர். இப்பணியின்போது பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் சு.வீரராஜ் தாமிரபரணியின் மேன்மை குறித்து மாணவர்களிடையே பாடல் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இவரது பணியை பாராட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு இன்று சான்று வழங்கினார்.